இந்த வருடத்தில் இதுவரை 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் !

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,494 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயினால் தொடர்ந்தும் மேல் மாகாணத்தில் வசிப்பவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, மேல் மாகாணத்தில் 17,159 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.