மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பான நடை பவனி
-கிண்ணியா நிருபர்-
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மார்பக புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபவணி இன்று வியாழக்கிழமை )இடம்பெற்றது.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.ரிஸ்வி தலைமையின் கீழ் இடம்பெற்ற நடைபவணி நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலாளர். எம் எச .கனி, திருகோணமலை தாய் சேய் நல மருத்துவ அதிகாரி வைத்தியர்.ஏ.எச்.சமீம், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.அஜித் , இகிண்ணியா நகர சபை செயலாளர். எம்.கே.அனிஸ், கிண்ணியா பதில் வலயக்கல்விப் பணிப்பாளர், கிண்ணியா பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
“உங்கள் ஆரோக்கியம் உங்கள் கைகளில்” எனும் தொனிப்பொருளின் கீழ் குறித்த நடைபவணி இடம்பெற்றது.