கோழித் தீவனத்தின் விலை குறைக்கப்பட்டால் முட்டை விலை குறையும் !
கோழித் தீவனத்தின் விலை குறைக்கப்படுமானால், முட்டைகளைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சி மற்றும் சந்தையில் முட்டைக்கான கேள்வி குறைந்தமையினால், முட்டை விலை குறைவடைந்தது.
ஏற்கனவே மேலதிக உற்பத்தி வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் அதிகளவான முட்டைகள் பண்ணைகளில் தேங்கியிருந்தன.
இதனை விவசாய அமைச்சின் செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன், கோழி முட்டை ஒன்றுக்கான விலையும் குறைக்கப்பட்டிருந்தது.
தற்போது, கோழி முட்டை ஒன்றுக்கான உற்பத்தி செலவு 32 ரூபாயாகக் காணப்படுகின்றது.
கடந்த வாரம் பண்ணையாளர்கள் உற்பத்தி செலவினத்திற்குக் கீழ் மட்டத்திலேயே முட்டைகளைச் சந்தைக்கு விநியோகித்திருந்தனர்.
எனவே, கோழித் தீவனத்தின் விலை குறைக்கப்படுமானால், உற்பத்தி செலவினம் குறைவடையும்.
இதன்மூலம் குறைந்த விலையில் முட்டைகளைச் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என அகில இலங்கை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.