இலங்கா சதொச தலைவர் இராஜினாமா

இலங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அபேவர்தன தனது இராஜினாமா கடிதத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு இன்று திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.

லங்கா சதொச லிமிடெட் நிறுவனத்திற்கு புதிய தலைவரை நியமிக்க புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு அனுமதி வழங்கி அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.