15 அமைச்சர்கள் கொண்ட தற்காலிக அமைச்சரவை : அநுர ஜனாதிபதியானால்?

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டால் புதிய ஜனாதிபதி செயலாளர் நியமிக்கப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து 15 அமைச்சர்கள் கொண்ட தற்காலிக அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கொழும்பு மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தி விருப்பு பட்டியலில் அடுத்த இடத்திலுள்ள லக்க்ஷ்மன் நிபுணாராச்சி நியமிக்கப்பபடுவார் எனவும் தெரியவருகின்றது.