ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ வாக்களித்தார்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை தொகுதியில் உள்ள வீரகெட்டிய டி.ஏ ராஜபக்ஷ மகா வித்தியாலயத்தில் தனது வாக்கினை அளித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷவுடன் அவரது மனைவி லிமினி ராஜபக்ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.