மன்னார் இலுப்பைக்கடவை சுட்டபிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

-மன்னார் நிருபர்-

மன்னார் இலுப்பைக்கடவை சுட்ட பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 12. 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில், மாவட்டச் செயலக அதிகாரிகள், கிராம மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்