
மட்டக்களப்பு வவுணதீவில் பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு வவுணதீவிலிருந்து விளாவெட்டுவானுக்குச் செல்லும் வீதியில் வாகனக் கோளாறினால் முச்சக்கரவண்டியொன்று தீப்பற்றி இன்று சனிக்கிழமை மாலை தீப்பற்றி எரிந்தது.
இதனால் அப்பகுதி மக்களிடையே இனம் புரியாத பயமேற்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

