
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம்
-யாழ் நிருபர்-
நோயாளர்களுக்கு ஏற்பட்ட மருந்து பற்றாக்குறைக்கு எதிராக குரல் எழுப்பிய தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியிலிருந்து ஒரு மணி வரை இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
சுகாதாரத் துறையில் ஏற்பட்ட பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரும்போது அதற்க்கு எதிராக தீர்மானங்கள் எதையும் எடுக்காது வெளிக்கொண்டு வந்தவர்களிடம் உண்மை தன்மைகளை ஆராய முற்படுவதாக தெரிவித்து இக் கவனயீப்பு போராட்டம் இடம்பெற்றதுடன் அதனை கைவிடுமாறும் கோரினர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
