
முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் 2 வயது குழந்தை மரணம்!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கே.கே.எஸ் வீதியால் சுன்னாகத்தில் இருந்து மருதனார்மடம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்ட நிலையில் 2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது
குறித்த முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தி தாயும், 2 வயது மகனும் பயணத்தை மேற்கொண்டனர். இதன்போது கிளை வீதி ஒன்றுக்கு திருப்ப முற்பட்டபோது முச்சக்கர வண்டி தடம்புரண்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த தாயும், மகனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
