சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியமுல்லை பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் இளைஞன் ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1,020 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்