
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தின் பின்னனியில் பாகிஸ்தான்
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தின் பின்னனியில் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவு இருப்பதாக ஹசீனாவின் மகன் சஜீத் வசீத் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ள பங்களாதேஷ் பிரதமர் ஹேக் ஹசீனா மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, பங்களாதேஷ பிரதமர் ஹேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுச் சென்ற நிலையில், நோபல் பரிசு வென்ற பேராசியர் யூனுஸ் தலைமையில், இடைக்கால அரசு அமைக்கப்படுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
