தேர்தலில் இருந்து இரண்டு சின்னங்க ள் நீக்கம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களில் இருந்து நாய் மற்றும் பன்றி சின்னங்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.

குறித்த சின்னங்கள் மத உணர்வைப் புண்படுத்தவோ அல்லது தர்ம சங்கடத்தை ஏற்படுத்தவோ கூடாது என்ற எண்ணத்தில் இவ்விரு சின்னங்களைத் தேர்தல் ஆணைக்குழு நீக்கியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்