சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: மூவர் கைது
குருணாகல் பிரதேசத்தில் கிரிபாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெட்டி ஆராச்சிகம பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட மூவர் நேற்று செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபாவ பொலிஸார் தெரிவித்தனர்.
வராவெவ மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20,27 மற்றும் 39 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிபாவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்