கல்முனை வடக்கு பிரதேச செயலக நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும் தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்களாக அமைதி வழியில் போராடி வருகின்றனர்.
92 ஆவது நாளாகிய இன்று திங்கட்கிழமை கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர்.
செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய மக்கள், அதிகாரிகளை உள்நுழைய விடாமல், உரிய உயர் அதிகாரிகளும் அரசும் எமக்கு தீர்வை தர வேண்டும் எனும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி திங்கட்கிழமை பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக 92 ஆவது நாளான இன்றும் அதிகளவான மக்கள் பல்வேறு சுலோகங்களை வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பவணியாக செல்வதுடன், வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993 ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்