முருங்கை கீரை பயன்கள்
⭕முருங்கையின் அனைத்து பாகங்களும் உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் காரணமாகவே தமிழர்களின் உணவு பழக்கங்களில் அதிகளவு முருங்கை கீரையை பயன்படுத்துகின்றன. இந்த முருங்கை கீரையை நமது அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்வதன் மூலம் என்னென்ன ஆரோக்கியம் கிடைக்கும் என்பதை இப் பதிவில் தெரிந்துகொள்வோம்.
🥦 தற்காலங்களில் சத்தில்லாத மற்றும் கலப்படங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அனைவரும் சாப்பிடுவதால் மலட்டுத் தன்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. ஆண், பெண் இரு பாலர்களும் முருங்கை இலைகளை வேக வைத்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை குறைபாடு நீங்கி குழந்தை பிறக்க வழி வகை செய்யும்.
🥦 கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து தங்களுடைய அன்றாட உணவு முறையில் முருங்கை கீரையை சேர்த்து கொள்வதன் மூலம் தங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். அதேபோல் தங்களுக்கு சுகப்பிரசவமும் ஆகும்.
🥦 குழந்தைகள் பிறந்து ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு முக்கிய உணவாக இருக்கிறது ஒரு சில குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு நின்று விடுகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலை சந்திக்கும் பெண்கள் முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
🥦 வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் முருங்கைக்காயுடன் சிறிதளவு ஓமம், ஒரு சிட்டிகை பெருங்காயம் தூள், மிளகு மற்றும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். பின் இந்த சூப்பை மிதமான சூட்டில் அருந்திவர வயிறு சம்மந்தப்பட்ட அதாவது செரிமான பிரச்சனை, மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் வயிற்று புண் போன்ற பிரச்சனைகள் குணமாவதுடன் உடல் நன்கு வலிமை பெரும்.
🥦 நாம் சாப்பிடும் உணவை நன்கு மென்று சாப்பிடவும், உணவை செரிமானம் செய்வதிலும் பற்களின் செயல்பாடுகள் இன்றியமையாததாக இருக்கின்றன. அத்தகைய பற்கள் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும்.
🥦 முருங்கை கீரையில் உள்ள இரும்பு சத்து தங்கள் முடி உதிர்வு பிரச்சனையை தடுத்து, தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும். மேலும் இளநரை பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து முருங்கை கீரையில் செய்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இளநரை நீங்கி, முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர செய்யும்.
🥦 ரத்தத்தில் வெள்ளை ரத்த அணுக்கள் குறையும் போது ரத்த சோகை ஏற்படுகிறது. பெரியவர்களை விட இந்த குறைபாடு குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. இதற்கு சிறந்த நிவாரணியாக முருங்கைக் கீரை இருக்கிறது. முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.
🥦 உடலில் வாத தன்மை அதிகரிக்கும் போதும், கடின உழைப்பில் ஈடுபட்ட பின்பும் சிலருக்கு உடல் மற்றும் கை கால்களில் வலி ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை உருவி, அதன் காம்புகளை நீக்கிவிட்டு, அந்த முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் தீரும்.
🥦 சிலருக்கு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் முருங்கை கீரையை சூப் செய்து, இளம் சூடான பதத்தில் குடித்து வர சுவாச சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் விரைவில் நீங்கும்.
🥦 முருங்கைக்கீரையில் தோல் வியாதிகள் மற்றும் இதர தோல் சம்பந்தமான குறைபாடுகளை போக்க உதவும் வைட்டமின்கள், புரத சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன. முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது.
முருங்கை கீரை பயன்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்