
கிழக்கு மாகாணசபையின் புதிய சிரேஷ்ட உதவிக் கணக்காய்வாளர் நாயகமாக கதிர்காமத்தம்பி பிரதீபன் நியமிப்பு
கிழக்கு மாகாணசபையின் புதிய சிரேஷ்ட உதவிக் கணக்காய்வாளர் நாயகமாக கதிர்காமத்தம்பி பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் அனுமதிக்கமைவாக கிழக்கு மாகாணசபை மற்றும் தொடர்புடைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களினது தேசிய கணக்காய்வுக்கு பொறுப்பாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், திருகோணமலை உட்துறைமுக வீதியில் உள்ள தேசிய கணக்காய்வு பிராந்திய அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
