
அவுஸ்திரேலிய அணி வீரருக்கு ஐசிசி கண்டனம்
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்று வருகின்றது.
இந்தத் தொடரில் இதுவரையில் 21 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
இதற்கமைய கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியின் போது நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய வீரரான மேத்யூ வேட்டிற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.
அவர் ஐசிசியின் நடத்தை விதிமுறைகளை மீறி, நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டமைக்காக, கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
