
அராலியில் இளம் பெண் எடுத்த தவறான முடிவு
-யாழ் நிருபர்-
யாழ் அராலி வடக்கு பகுதியில் இளம் பெண்ணொருவர் நேற்றையதினம் திங்கட்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
அராலி வடக்கு பகுதியை சேர்ந்த சிவகரன் மயூரா (வயது – 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் தந்தையும், அண்ணாவும் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவர் நேற்று இவ்வாறு அவர் உயிரை மாய்த்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்