
தவறான முடிவெடுத்த இரண்டு பிள்ளைகளின் தந்தை
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
வேவிபுரம், அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் முகுந்தன் (வயது – 31 ) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மனவிரக்தியால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபர் இவ்வாறு நேற்றையதினம் உயிரை மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்