
மட்டக்களப்பு வாழைச்சேனையில் மாடு மேய்க்கச் சென்ற இளைஞன் உயிரிழப்பு
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை பகுதியில் நீரில் மூழ்கிய நிலையில் இளைஞன் ஒருவர் இன்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரிதிதென்னை புதிய கிராமம் பகுதியைச் சேர்ந்த சாலி முகம்மது றிஹாஸ் (வயது 23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரிதிதென்னை குளத்திற்கு அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞன் குளக்கட்டில் சறுக்கி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் உடலை பிரதேச மீனவர்கள் கண்டெடுத்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்