Last updated on June 10th, 2024 at 10:59 am

கீழ் கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு

கீழ் கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணி முதல் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை 1 மணி வரை தற்காலிகமாக மூடப்பட்டது.

மழையுடனான வானிலையுடன் கீழ் கடுகன்னாவ பிரதேசத்தில் வீதியின் இருபுறங்களிலும் உள்ள ஆபத்தான கற்கள் மற்றும் மரங்கள் அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க