Last updated on June 10th, 2024 at 11:08 am

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

மஹியங்கனை அல்ஹேனத்தலாவ வனப்பகுதியில் கடந்த சில காலமாக பாரியளவிலான கசிப்பு உற்பத்தி செய்த இடத்தை சுற்றிவளைத்து 20,000 மில்லிலிட்டர் கசிப்பு மற்றும் 850,750 மில்லிலிட்டர் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இங்கு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திஸ்ஸபுர, கமகும்புர, மாபகதேவாவ பகுதியை சேர்ந்த 35 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த சந்தேக நபர் குளத்துக்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் சகிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக மஹியங்கனை பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சுற்றி வளைப்பை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன் படுத்தப்படும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்த சந்தேக நபரை நாளை மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க