ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
-பதுளை நிருபர்-
பசறை தெஹிகிடகம பகுதியில் இன்று செவ்வாய் கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 720 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிகிடகம பசறை பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப் படை மற்றும் பசறை பொலிஸ் யாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அமைய குறித்த சுற்றி வளைப்பை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்
சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 720 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பசறை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்