யாழில் ஆரம்பமான கதிர்காம பாத யாத்திரை மூதூரை வந்தடைந்துள்ளது

-மூதூர் நிருபர்-

யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமான கதிர்காமத்திற்கான பாத யாத்திரை இன்று திங்கட்கிழமை காலை மூதூரை வந்தடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமான இப் பாத யாத்திரையானது ஜுலை 06 ஆம் திகதி கதிர்காமத்தில் இடம்பெறும் கொடியேற்றத்தின் போது கதிர்காமத்தைச் சென்றடையவுள்ளது.

இதனையிடையே பாத யாத்திரை குழுவினர் ஒவ்வொரு ஆலயங்களாக தரிசித்து கதிர்காமத்தை சென்றடையவுள்ளனர்.

இப்பாத யாத்திரையில் ஆண்கள், பெண்கள் என 88 பேர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்