சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

கடந்த மே மாதம் 15ஆம் திகதி நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே மாதம் 6 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றன.

இந்நிலையில், பரீட்சையில் 452,979 விண்ணப்பதாரர்கள் தோற்றியதாகவும், அவர்களில் 3,87,648 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் எனவும், 65,331 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் எனவும் பரீட்சை திணைக்கள தெரிவித்துள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்