செந்தில் தொண்டமானுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? : இப்போதைய ஜனாதிபதி நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம்!

 

மாகாண சபையில் உயர் பதவிகளில் இருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்ற சில அதிகாரிகளுக்கு தொடர் கடமையாற்ற அனுமதியளிக்க கிழக்கு மாகாண ஆளுநருக்கு அதிகாரம் வழங்கியது யார், என ஈரோஸ் கட்சியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்றுவெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பல் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டிற்கு கிடைத்த பொக்கிசமாக இப்போதைய ஜனாதிபதியை நான் பார்க்கின்றேன். அதை நான் தொடர்ச்சியாக கூறி வருகின்றேன். செந்தில் தொண்டமான் இந்த மக்களிடம் கப்பம் கோருவதன் ஊடாக ஜனாதிபதியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கின்றார்.

இவர் வாகரையில் பாம் ஒயில் கம்பனி எனும் பெயரில் பல ஏக்கர் காணிகளை கொள்ளையிடுகின்றார் அதனை கொடுக்க மறுக்கும் அதிகாரிகளை அச்சுறுத்துகின்றார்கள்.

1993 ஆண்டு அமைச்சர் அவையின் அங்கிகாரத்துடன் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக இருந்து வந்திருந்த நிலையில் தற்போது அது உப பிரதேச செயலகமாக மாற்றியிருக்கின்றார்கள்.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மக்களை ஆளுநர் செந்தில் இதுவரை போய் சந்தித்துள்ளாரா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் உள்ளது,  என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்