வாகன விபத்து: நால்வர் படுகாயம்
-யாழ் நிருபர்-
கனரகவாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் ஏ9 வீதியில் இந்தச் சம்பவம் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கனரக வாகனம் பின்னால் திருப்ப முற்பட்டவேளையில் பின்னால் வந்த முச்சக்கரவண்டி அதனுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித் மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்