நுவரெலியாவில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் வீடு தீக்கிரை
நுவரெலியா பம்பரகலை பகுதியில் இன்று செவ்வாய் கிழமை காலை வீடு ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்து வீடு தீக்கிரையாகியுள்ளது.
இதனால் வீட்டின் உள் பகுதி முழுமையாக எரிந்துள்ளதுடன் இலத்திரனியல் பொருட்கள் உட்பட அதிகமான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
குறித்த வீட்டில், வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த சமயம் வீட்டின் அருகாமையில் இருந்த மரம் காற்றின் காரணமாக வீட்டின்மேல் விழுந்தமையால் வீட்டிற்கு செல்லும் மின்வயர் அறுந்து விழுந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென வீட்டினுள் தீ பற்றி எரிந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தீப்பரவலுக்கு மின் ஒழுக்கே காரணம் என வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த தீயினை அயலவர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்