ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான புதிய மேலங்கி அறிமுகம்
கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் மகா வித்தியாலய தரம் 1-5 வரையான மாணவர்களின் சீருடையில் முதற் தடவையாக மாற்றம் ஒன்றை ஏற்படுத்த தீர்மானித்து அதற்கமைவாக இன்று மாணவர்களுக்கான மேலங்கி அணிவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் தலைமையில் இடம்பெற்றது.
அதிபரின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்