தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

-யாழ் நிருபர்-

தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் மேற்பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியானது நேற்று வியாழக்கிழமை பி.ப 1 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

கல்லூரி அதிபர் ம.மணிசேகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பழையமாணவனும், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளரும் சி.சிவபாலா, சிறப்பு விருந்தினராக தெல்லிப்பழை கோட்டக்கல்விப் பணிப்பாளர் வே.அரசகேசரி மற்றும் கல்லூரியின் ஐக்கிய இராட்சிய பழையமாணவர் சங்க பிரதிநிதி அ.வமலதாசனும் கலந்துகொண்டனர்.

இதேவேளை இந் நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர், பெற்றோர் உட்படப் பலர் கலந்து கொண்டதுடன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.