கொழும்பில் வீடொன்றில் தீ பரவல்

கொழும்பில் இன்று சனிக்கிழமை வீடொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

பன்னிபிட்டிய – பெலவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.

இதன்போது 2 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினர் தீ பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதுடன் தீ விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.