
ரயில்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு
ரயில்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் இன்று வியாழக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொடருந்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 18ஆம் திகதி போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 50 ரூபா குறைந்த பட்ச கட்டணம் 150 ரூபாயாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு (2024) பெறுமதி சேர் வரியில் ஏற்பட்ட அதிகரிப்பே இந்த கட்டண அதிகரிப்பிற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
