
சிறுவனுக்கு எமனான நுளம்பு வலை நூல்
புத்தளம் பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளான்.
அநுராதபுரம் வீதியில் உள்ள வில்லுவ வத்தை பகுதியைச் சேர்ந்த மல்லவ ஆராச்சிலாகே உபேக்ஸ் தீபமால் (வயது – 12) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் நேற்றிரவு வீட்டில் உள்ள கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் சத்தமில்லாததை அவதானித்த பெற்றோர்கள், வீட்டின் படுக்கை அறைக்குச் சென்று பார்த்த போது அங்கு சிறுவன் கழுத்து இறுகி கிடப்பதை பார்த்து உடனடியாக உறவினர்கள், அயலவர்களின் உதவியோடு புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பரிசோதனை செய்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
