கால்வாயில் தடம் புரண்ட கெப் வண்டி

திருகோணமலை கந்தளாய் – சேருவில வீதியில் உள்ள பேராறு பகுதியில் இன்று சனிக்கிழமை கெப் வண்டி ஒன்று கால்வாயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

பின்னர், அப்பகுதி மக்கள் கயிறு மூலம் ஜீப்பை கரைக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.