சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்

-யாழ் நிருபர்-

 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் மக்களது காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த விகாரையை அகற்றுமாறு கோரி ஒவ்வொரு போயா தினமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நாளை வியாழக்கிழமை பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.