மத்திய காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டிய நிலை

மத்திய காசா பகுதியில் வசிக்கும் 150,000 பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தரைப்படை நடவடிக்கைகள் மேலும் விரிவடைவதே இதற்குக் காரணம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

தற்போது, ​​மத்திய காசா பகுதிக்கு ஏராளமான டாங்கிகள் வந்துள்ளன, கடந்த 11 வார மோதல்களில் 21,300 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.