
இயன்றவரை முகக்கவசங்களை அணியுமாறு வேண்டுகோள்
இயன்றவரை முகக்கவசங்களை அணியுமாறு தொற்றுநோயியல் நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிநாட்டுப் பயணங்களின் போது நோய் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்இ நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயோஃபில்ம் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாக நாட்டின் கொவிட் நிலமை தொடர்பான நிலவரங்களை அறிவிக்கும் நிபுணர் வைத்தியர் ரோஹித முதுகல தெரிவித்துள்ளார்
புதிய வைரஸ் பரவுவது எதிர்காலத்தில் உறுதியாகத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் இப்போது குளிர் எதிர்வினை போன்ற ஒரு சிறிய நோயின் வடிவத்தில் தோன்றுவதாகவும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் மருத்துவர் சுட்டிக்காட்டினார்.
கொவிட் மரபணு பகுப்பாய்வின் இறுதி சோதனையில் புதிய மாறுபாடு கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
