
மீன்பிடி படகு ஒன்றில் இருந்து பெருமளவான மஞ்சள் மூடைகள் மீட்பு
-யாழ் நிருபர்-
யாழ் காக்கைதீவு பகுதியில் இன்று திங்கட்கிழமை பெருமளவான மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டன.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மீன்பிடி படகு ஒன்றில் இருந்து இந்த மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டன.
இவ்வாறு மீட்கப்பட்ட மஞ்சள் மூடைகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

