
4 ஆண்டுகளில் 5,000 சிறுமிகள் தங்கள் சொந்த விருப்பப்படி துஸ்பிரயோகம்
16 வயதுக்குட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சிறுமிகள் நான்கு ஆண்டுகளுக்குள் சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என, சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கண்டி தேசிய வைத்தியசாலையின் சட்டத்தரணி வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க, 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதிலும் உள்ள 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக 6307 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 5055 முறைப்பாடுகள் அவர்களின் சம்மதத்துடன் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 17 பொலிஸ் பிரிவுகளில் கடந்த மூன்று வருடங்களாக 16 வயதுக்குட்பட்ட 132 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் சம்மதத்துடன் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சுபசிங்க தெரிவித்துள்ளார்.
பரிசீலனைக்கு உட்பட்ட மூன்று ஆண்டுகளில் 15 சிறுமிகள் மட்டுமே பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
