
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு : வியாபாரிகள் மீது குற்றச்சாட்டு
தற்போது சந்தையில் சில மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
போஞ்சி, கரட், லீக்ஸ் மற்றும் முள்ளங்கி போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்று 400 ரூபாய் வரையும் ஒரு கிலோகிராம் தக்காளி 500 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்படுகின்ற விலையை விட அதிகரித்த விலையிலேயே மரக்கறிகள் விற்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
