
நீதி அமைச்சருடன் சர்வமத தலைவர்கள் விசேட கலந்துரையாடல்
-எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சர்வமத தலைவர்களான சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக தேரர், கலாநிதி சிவ ஸ்ரீ பாபுசர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி மற்றும் கலாநிதி நிஷான் குரே பாதிரியார் ஆகியோர் அண்மையில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் சந்தித்து சமய மற்றும் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் (ONUR) சபையின் ஊடாக, நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
