இலங்கையில் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்படுமா?

இலங்கையில் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு என புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தகவல் அதிகாரி புவியியலாளர் நில்மினி தல்பே தெரிவித்துள்ளார்.

ரிக்டர் அளவுகோலில் 5 க்கும் குறைவான சிறிய நிலநடுக்கங்கள் நாட்டில் ஏற்படுகின்றன. நாட்டில் 4 நில அதிர்வு அளவீடுகள் நிறுவப்பட்டுள்ளன.

அம்பலாங்கொட, ஹக்மன, பல்லேகலை மற்றும் மஹகந்தராவ பிரதேசங்களில் நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், நில அதிர்வு பதிவுகளில் தரவு பதிவு செய்யப்படுகிறது. நிலநடுக்கத்தின் வலிமை, நிலநடுக்கம் எவ்வளவு தூரத்தில் இருந்து ஏற்படுகின்றது.

புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிறப்பு செயல்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு அந்தத் தகவலை மக்களுக்கு விரைவாகத் தெரிவிககும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.