பொல்கொல்ல அணையின் நான்கு வான் கதவுகள் திறப்பு
மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பொல்கொல்ல அணையின் நான்கு வான் கதவுகள் இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளன.
மகாவலி ஆற்றின் நீர் மட்டம் உயர்வினால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் வினாடிக்கு பத்தாயிரம் கன அடி நீர் கொள்ளளவு விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கம் மற்றும் மகாவலி ஆற்றை அண்மித்த மக்கள் அவதானமாக இருக்குமாறு அணைக்கு பொறுப்பான பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
