
பொலிஸ் உத்தியோகத்தருக்கு கத்தியால் குத்து போத்தல் தாக்குதல்
கொழும்பில் தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர்களை துரத்திச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் மோட்டார் சைக்கிளை விட்டு தப்பிச்செல்ல முற்பட்டபோது, அவர்களை துரத்திச்சென்ற பொலிஸ் உத்தியோகத்தரை குறித்த மூன்று பேரும் கத்தியால் குத்தி போத்தலால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று சந்தேக நபர்களில் இருவர் பிரதேசவாசிகளின் உதவியுடன் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தப்பிச்சென்ற மற்றொரு சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கை தொடர்பிலான விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
