மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலோப்பளை பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.’

பளை நகரை சேர்ந்த குணம் கணேசன் (வயது – 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பளை நகர பகுதியில் இருந்து புலோப்பளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் புலோப்பளையில் இருந்து பளை நகரப்பகுதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்