
இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு
இலங்கையில் பெண்களின் ஆயுட்காலம் 80 வருடங்களாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, இலங்கையில் தற்போது பெண்களின் ஆயுட்காரம் சராசரியாக 76/77 வருடங்கள் என கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் அவர் சிசு இறப்பு வீதம் ஆயிரத்துக்கு 6 ஆகவும் தாய் இறப்பு வீதம் 100,000க்கு 28 ஆகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமை ஐக்கிய இராச்சியத்தின் நிலைமையைப் போன்றது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
