
சிசிடிவி ஆதாரத்துடன் சிக்கிய சிலை திருடர்கள்
மொரட்டுமுல்லை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சிலையொன்றை திருடிய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மல்வான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் மற்றொரு பகுதியில் உள்ள தேவாலயத்தில் காரை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த சிசிடிவி ஆதாரங்களை கொண்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
