கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு

வெள்ளவத்தை கடற்கரையில் இன்று ஞாயிற்று கிழமை காலை  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் (வயது – 28) என்ற இளைஞரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

பிரதேசவாசிகளால் வெள்ளவத்தை பொலிஸாருக்கு சடலம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் உடலில் சிராய்ப்பு அடையாளங்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்