
தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்
-கிண்ணியா நிருபர்-
தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2023ம் ஆண்டின் 3ம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றது.
இதில் மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எல்.மஹ்ரூப்,கணக்காய்வு அத்தியட்சகர் வை.எம்.நிஸார் கலந்து கொண்டு கூட்டத்தை வழிநடாத்தினர்.
இதன் போது உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப்,கணக்காளர் செல்வதாஸ்,பிரதேச செயலக உள்ளக கணக்காய்வாளர் ஈ.ஜி.டி.ரொசான்,கிளை தலைவர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

